அரசாங்க நிலத்தை வெளியாட்களுக்கு வழங்கியமைக்காக போராட்டம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்க நிலத்தை வெளியாட்களுக்கு வழங்கியமைக்காக போராட்டம்!!!

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலப்பரப்பை நில சீர்திருத்த ஆணையகத்தின் அதிகாரிகள் வெளியாட்களுக்கு ஒப்படைத்ததாக கூறி நல்லதண்ணி ரிகாடன் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியிலேயே நேற்று(புதன்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


$ads={2}

பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நல்லதண்ணி ரிகாடன் பகுதியில் உள்ள நிலப்பரப்பில் இரண்டரை ஏக்கர் கொண்ட நிலத்தினை கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நில சீர்திருத்த ஆணையகத்தின் அதிகாரிகள் வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பல வருட காலங்களாக இப்பகுதியில் வசிக்கும் தங்களுக்கு ஒரு சிறிய துண்டு நிலம் கூட வழங்கப்படவில்லை எனவும், எனினும், வெளியாட்களுக்கு இந்த நிலப்பரப்பை கொடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நில சீர்திருத்த ஆணையகத்தின் அதிகாரிகளிடம் வினவிய போது,

“நாங்கள் குறித்த இடத்தினை மேற்படி நபருக்கு வழங்கவில்லை. ஆவணங்களும் தயாரித்துக்கொடுக்கவில்லை. இது எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றோம்“ என தெரிவித்தனர்.


0Shares

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.