நேற்று நாட்டில் பதிவான 668 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று நாட்டில் பதிவான 668 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரம்!

இன்று (16) இதுவரையில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில், கொழும்பு மாவட்டத்தில் 309 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 104 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் இருவரும் அம்பாறை மாவட்டத்தில் நால்வரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் அடங்குகின்றனர்.


$ads={2}

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 309 பேரில் கிருளப்பனையில் 14 பேரும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் 19 பேரும் பொரளையில் 24 பேரும் தெமட்டகொடையில் 11 பேரும் மருதானையில் 25 பேரும் புளூமென்டல் பகுதியில் 13 பேரும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 69 பேரும் மட்டக்குளியில் 62 பேரும் புறக்கோட்டையில் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளையில் 06 பேரும் களனியில் நால்வரும் மினுவாங்கொடையில் இருவரும் மஹர பகுதியில் 68 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 157 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 34,121 ஆக அதிகரித்துள்ளதோடு, தொற்றிலிருந்து 24,867 பேர் குணமடைந்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.