இலங்கைக்கு 500 சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு 500 சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

முழுமையாக சுகாதார ஒழுங்குவிதிகளின் கீழ் இலங்கைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 500 சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன இதற்காக அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2021ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி முதல் ஒரு பரீட்சாத்த திட்டத்தின் கீழ் 12 இடங்களுக்கு சுற்றுலாப்பயணிள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

$ads={2}

இதன்கீழ் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுமார் 500 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இலங்கையில் அவர்கள் செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இடங்களில் யால, சீகிரியா, தலதா மாலிகை, பின்னவல மற்றும் மின்னேரியா ஆகியவை அடங்குகின்றன. ஆனால் அவர்கள் இலங்கை மக்களுடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சுற்றுலாப் பயணிகள், பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் அல்லது மத்தளை சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வந்தவுடன் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இந்தநிலையில் இந்த பரீட்சாத்த திட்டம் பயனளித்தால், சுற்றுலாவுக்கு நாட்டை மேலும் திறக்க வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யலாமா என்பதை தீர்மானிக்க ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.