சற்றுமுன் பொறுப்பேற்கப்படாத 19 உடல்களை தகனம் செய்யும் பணி ஆரம்பமாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் பொறுப்பேற்கப்படாத 19 உடல்களை தகனம் செய்யும் பணி ஆரம்பமாகின!


சற்றுமுன் கொழும்பு நகர சபை பொறுப்பேற்கப்படாத கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.


சடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்கள், அவை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதால் குடும்ப உறுப்பினர்கள் உடலை ஏற்க மறுத்துவிட்டனர்.


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத  உடல்களை தகனம் செய்யலாம் என்று சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா முன்பு சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்திருந்தார்.


இந்த விவகாரத்தில் அவரிடம் கோரப்பட்ட ஆலோசனைகளுக்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சின் இயக்குநர் அசேல குணவர்தனத்திடம், உடல்களை தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் படி தகனம் செய்ய முடியும் என கூறியுள்ளார்.


$ads={2}


கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த உடல்களை தகனம் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை அரசாங்கம் முன்னர் கோரியிருந்தது.


இதுபோன்ற தகன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டப்பூர்வ அதிகாரங்கள் அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் சுகாதார அமைச்சகம் இது சட்டமா அதிபரை அணுகியுள்ளது என்றார்.


கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை தகனம் செய்ய எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க மறுத்ததன் விளைவாகவே இந்த பிரச்சினை எழுந்துள்ளது என்று பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.


அதன்படி, கொழும்பு நகர சபைக்கு உரிமை கோரப்படாத 19 உடல்களை தகனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.yazhnews


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க அரசாங்கம் இதுவரை மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.