கண்டி நகர பாடசாலை ஒன்றில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி நகர பாடசாலை ஒன்றில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


கண்டியின் திரித்துவ கல்லூரி (Trinity College) உத்தியோகபூர்வ அலுவலகங்களில் வசித்து வரும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்தின இதனை தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே, இங்கு அமைக்கப்பட்டுள்ள அலுவலக வீடொன்றில் வசித்து வந்த 63 அகவைக்கொண்ட பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து அங்குள்ளவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனைகளின் போதே இந்த 13 பேரும் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே கண்டி நகரின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள மூன்று பாடசாலைகளில் கண்டி திரித்துவ கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இந்த மூன்று பாடசாலைகளை தவிர ஏனைய 42 பாடசாலைகளும் நாளை (14) திறக்கப்படவுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.