இளைஞர்களை நண்பனாக பார்க்கும் நாமல் நாட்டில் எதிர்கால ஜனாதிபதி! 

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இளைஞர்களை நண்பனாக பார்க்கும் நாமல் நாட்டில் எதிர்கால ஜனாதிபதி! 

வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்களை நண்பனாகப் பார்க்கும் நாட்டின் எதிர்கால ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவார் என மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பா. சந்திரகுமார் தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மாநாடு நிகழ்வு நேற்று (13) மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் பா. சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.


அதனடிப்படையில் மட்டக்களப்பு தொகுதிக்கான மாநாடு இருதயபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


$ads={2}

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி இணைப்பாளரும், தலைவருமாகிய ந. வேணுகோபன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டிற்கு பிரதம அதிதிகளாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பா.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் முன்னேற்றத்தினை கருப்பொருளாக கொண்டு இடம்பெற்ற இம் மாநாட்டில் அதிகளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.