ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மாநாடு நிகழ்வு நேற்று (13) மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் பா. சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு தொகுதிக்கான மாநாடு இருதயபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி இணைப்பாளரும், தலைவருமாகிய ந. வேணுகோபன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டிற்கு பிரதம அதிதிகளாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பா.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் முன்னேற்றத்தினை கருப்பொருளாக கொண்டு இடம்பெற்ற இம் மாநாட்டில் அதிகளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.