கொழும்பு கிங்ஸை எதிர்த்து கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி! இறுதி போட்டிக்கு தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு கிங்ஸை எதிர்த்து கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி! இறுதி போட்டிக்கு தெரிவு!


எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டியில் கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி இன்று (13) ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.


நாணய சுழற்சியை வென்ற கோல் க்ளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.


அதனடிப்படையில், முதலில் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி சார்ப்பில் டேனியல் ட்ரமன்ட் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.


$ads={2}


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.


அதனடிப்படையில் முதலாவது அணியாக கோல் க்ளடியேட்டர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


நாளைய தினம் இரண்டாவது அரையிறுதி போட்டி ஜப்னா ஸ்டாலியன் மற்றும் தம்புள்ள வைக்கிங் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.