நாட்டில் 100,000 நபர்கள் சுய தனிமைபடுத்த்தலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 100,000 நபர்கள் சுய தனிமைபடுத்த்தலில்!

நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தரவுகளின் அடிப்படையில் 95 ஆயிரத்து 825 பேர் வீடுகளின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலே அதிகளவானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


$ads={2}

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 35 ஆயிரத்து 114 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைளை கட்டாயம் கடைபிடிக்குமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் குறித்த வீடுகளுக்குள் உட்பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.