சுகாதார பிரிவுக்கு அறியப்படுத்தாமல் கொரோணா தொற்றுடன் கம்பளை வந்த பெண்ணினால் பலருக்கு சிக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார பிரிவுக்கு அறியப்படுத்தாமல் கொரோணா தொற்றுடன் கம்பளை வந்த பெண்ணினால் பலருக்கு சிக்கல்!

கம்பளை கந்தலா மேல் பிரிவு தோட்டத்தில் தனது தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை பொலிசார், சுகாதாரப் பிரிவினர் திரட்டி வருகின்றனர்.

கம்பளையை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த பெண் கொழும்பு களனி பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த இந்த பெண், அங்கு கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவருக்கு பிசிஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாயார் இறந்த செய்தி கேட்டதும், சுகாதார பிரிவினருக்கு அறிவிக்காமல்


$ads={2}

தனது கணவருடன், வாடகை முச்சக்கர வண்டியில் கம்பளைக்கு வந்தார்.

இதனையடுத்து தாயாரின் சடலம் நேற்று காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் குறித்த பெண்ணிற்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

இதேவேளை குறித்த மரணச்சடங்கில் மூன்றிற்கும் அதிகமான தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து தோட்டப் பகுதியை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் தொழிலாளர்கள் நேற்றையதினம் தொழிலுக்கு செல்லவில்லை.

அத்துடன் தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட பெண், புஸல்லாவ நகரில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கும் சென்றதாக கூறப்படுகின்ற நிலையில் அது தொடர்பான விபரங்களை திரட்ட சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.