குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவர் பணிபுரியும் விகாரைக்கு திடீர் என சமூகம் அளித்ததாக சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பண்ணாலோக தேரர் தெரிவித்தார்.
வழக்கறிஞரின் உதவியின்றி அவரை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வற்புறுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் வெளியிட்ட தகவல்களால் தான் இந்த விசாரணையை நடத்த CIDயினர் முற்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
$ads={2}
ஒரு சக்திவாய்ந்த தலையீடு காரணமாகவே இவ்வாறான ஒரு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு தன்னிடம் கேள்விகளை தொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகி அறிக்கை அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் ஊடக சந்திப்பில் வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பாக, விசாரிப்பதற்கு CID யினர் இத்தனை ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் அவரது முகப்புத்தக கணக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.