ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று பசில் ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
19 மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பசில் ராஜபக்ஷ விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்வார் என்ற செய்தி அண்மையில் வௌியாகி இருந்த பின்புலத்தில் இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.