இன்று மொத்தமாக 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளயாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
$ads={2}
- கொழும்பு 14 இல் வசிக்கும் 83 வயதுடைய பெண். வீட்டிலேயே மரணித்துள்ளார். அதி உயர் குருதி அமுக்கம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- சிலாபத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் சிலாபம் வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யும் போது உயிர் பிரிந்துள்ளது. அதி உயர் குருதி அமுக்கம் தீவிரமடைந்ததால் மூளைக்கு செல்லும் குருதி தடைப்பட்டுள்ளது.
- ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண். இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கபடும் போது இறந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி அதி உயர் குருதி அமுக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
- கொழும்பு 13 ஐச் சேர்ந்த 78 வயதுடைய ஆண். வீட்டிலேயே இறந்துள்ளார். கொரோனா தொற்றுடன் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.
- கொழும்பு 13 ஐச் சேர்ந்த ஆண். வீட்டிலே இறந்துள்ளார். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்.