
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டப் பகுதியில் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நிவ்வெளிகம தோட்டத் தொழிற்சாலைப் பிரிவில் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பிலேயே இன்று (27) இரவு தீ விபத்து ஏற்பட்டதுடன் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளது.
இதனால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளதுடன் அவர்களின் உடமைகளும், முக்கியமான ஆவணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்ததுடன் தீயணைப்படையினர் வருவதற்குள் லயன் குடியிருப்பு முழுமையாக எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் நோர்வூட் பிரதேச சபை ஊடாக செய்யப்பட்டு வருகின்றது.






