கொழும்பில் புர்கா அணிந்து நடமாடிய ஆணொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் புர்கா அணிந்து நடமாடிய ஆணொருவர் கைது!

புர்கா அணிந்து நடமாடிய ஆண் ஒருவரை கொழும்பு – தெஹிவளை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


நேற்றையதினம் (26) தெஹிவளை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் பிரவேசித்த சந்தேக நபரை நோட்டமிட்ட மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அவரை அழைத்து விசாரணை செய்தனர்.


$ads={2}


இதில் புர்காவை அணிந்திருப்பது ஆண் எனத் தெரியவந்ததை அடுத்து, உடன் கைது செய்து கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


இதன்போது சந்தேகநபரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட சரீரப் பிணையில் விடுத்த நீதிமன்றம், அங்கொடை மனநோய் வைத்தியசாலையில் பரிசோதனை செய்து அடுத்த வருடம் ஜுன் 10ஆம் திகதி அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.