LPL கண்டி அணியில் இர்பான் பதான்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LPL கண்டி அணியில் இர்பான் பதான்!!!


இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவது போன்றே இலங்கையில் லங்கன் ப்ரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த டி20 போட்டிகள் இவ்வாண்டு நவம்பர் 21-ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
$ads={2}
5 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளதோடு, மத்தலை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கட் மைதானம், கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் கொழும்பு பிரேமதாச மைதானம் ஆகியவற்றில் இப்போட்டிகள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21-ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த இர்பான் பதான் விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வணியில், குசல் பெரேரா, க்ரிஸ் கேல், குசல் மெண்டிஸ், நுவன் பிரதீப் ஆகியோரும் உள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன அணியின் பயிற்றுவிப்பு குழாமில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.