நாட்டில் நேற்றைய தினம் அதிகளவான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்றைய தினம் மொத்தமாக 11,999 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினை அடையாளம் காண பெப்ரவரி முதல் நேற்று வரையான காலப் பகுதியில் இலங்கையில் மொத்தம் 512,735 பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நேற்று மொத்தமாக 239 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 89 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 28 பேர் இரத்னபுரி மாவட்டத்திலும், 21 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 20 பேர் களுத்துறை மாவட்டத்திலும் 11 பேர் வவுனியா மாவட்டத்திலும், 10 பேர் கேகாலை மாவட்டத்திலும், 4 பேர் காலி மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து 59 பேரும் இவ்வாறு நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். YazhNews