கலுபோவில மருத்துவமனையின் குழந்தை பிரிவில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
நுகேகொடவில் வசிக்கும் குறித்த மருத்துவர் கொரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.