உடல் நலம் குன்றிய 25 வயதுடைய இளைஞன் தனது தாயை கொரோணா அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு அழைத்துக் சென்றதும் தற்கொலை செய்துள்ளார். இச்சோக சம்பவம் ஹோமாகமையில் நடந்துள்ளது.
25 வயதான இளைஞன் தனது தாயுடன் வசித்து வந்ததுள்ளார், வெள்ளிக்கிழமையன்று தாயார் சுகாதார அதிகாரிகளால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து இரவு தனது வீட்டில் குறித்த இளைஞனுக்கு தனியாக தங்க வேண்டியிருந்தது.
நிலைமையைப் புரிந்து கொள்ளாததற்கும், அவரை தனது தாயிடமிருந்து பிரித்தமைக்குமாக அக்கம்பக்கத்தினர் அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.
"தாயை அழைத்துச் சென்றபோது, அவரது சிறப்புத் தேவை மகனையும் அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளிடம் சொன்னோம், ஏனென்றால் அவர் தனியாக இருப்பார். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. தனது மகன் எப்படி உயிர்வாழ்வான் என்பதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் தாயை அழைத்துச் சென்றார்கள் ”என்று பிரதேச மக்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
“கொரோனா காரணமாக வீட்டின் அருகில் கூட செல்ல வேண்டாம் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். இன்று குறித்த தாய் எங்களை அழைத்து அவரைப் பற்றி விசாரித்தார். நாங்கள் கதவைத் திறந்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டோம் ”என்று பிரதேச மக்கள் மேலும் கூறினார்.