கொழும்பில் மேலும் 5 பகுதிகள் நாளை மறுநாள் (16) அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி போன்ற பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.
$ads={2}
மேலும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீளறிவிப்பு வரும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடரும் என தெரிவித்தார்.