இந்நிலையில், கொரோனா வைரஸினால் இலங்கையில் இதுவரை 35 மரணங்கள் பதிவாகியுள்ளன.
78 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்திருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இருதய கோளாறு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் எவையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை