அமெரிக்க ஜனாதிபதி விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை! இன்னும் தேர்தல் முடிவு பெறவில்லை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க ஜனாதிபதி விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை! இன்னும் தேர்தல் முடிவு பெறவில்லை?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 294 வாக்குகள் பெற்று 46ஆவது அதிபராக பதவியேற்க உள்ளார். எனினும் தோல்வி அடைந்ததை டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு ஏற்க மறுத்துள்ளது.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 294 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இந்நிலையில், தோல்வியை ஏற்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் தயாராக இல்லை. இதுதொடர்பாக, ட்ரம்பின் பிரசார குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. அவரது ஆதரவு ஊடகங்கள் அவருக்கு உதவி செய்வதற்காகவும், உண்மையை மறைக்கவும் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.

$ads={2}

தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதுதான் உண்மை. எந்த ஒரு மாகாணத்திலும் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கவில்லை. முக்கியமான மாகாணங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.

திங்கட்கிழமை முதல் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து சரியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க உள்ளோம். அமெரிக்க மக்கள் ஒரு நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். இதுதான் நமது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு காரணமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.