கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அமுல்படுத்தப்பட்டுள்ள சமுக இடைவெளி தூரம் ஒரு மீட்டரில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
$ads={2}
புதிய கொரோனா வைரஸுக்கும் மக்களுக்கும் இடையேயான தூரம் குறைந்தது ஒன்றரை மீட்டர் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தால் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க முடியும். மனித சமூகத்தின் நடத்தைதான் கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பதை தீர்மானிக்கிறது. இந்த நோய் பரவாமல் தடுக்கும் முக்கிய விடயமாக உங்களுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் இடைவெளி ஆகும்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், தற்போது ஒரு மீட்டராக பேணப்படும் சமூக இடைவெளியை இரண்டு மீட்டராவது அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.