கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் நான்கு மரணங்கள் இன்று (07) பதிவாகியுள்ளன.
இதன்படி, கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவரும், கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவரும், கொழும்பு 10 வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவர், மற்றும் கணேமுள்ள பகுதியை சேர்ந்த 88 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு மரணித்துள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா மரணங்கள் இந்நான்கு மரணங்களுடன் சேர்த்து 34ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.