மேல் மாகாணத்திலும், குளியாப்பிட்டி மற்றும் எஹலியகொட காவல்துறை பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்வதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், புதிய வழமைப்படுத்தல் முறைமைக்கு அமைய அனைவரும் செயற்பட வேண்டும்.
இன்றும், நாளையும் ஊரடங்கு சட்டம் தொடர்பான விதிமுறைகள் தொடர்ந்தும் பிற்பற்றப்படவுள்ளன.
நாட்டிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்ததந்த பகுதிகளுக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அது தொடர்பான செயற்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன.
$ads={2}
சில சந்தர்ப்பங்களில் கிராமங்கள், வீடுகள், குடியிருப்பு தொகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த நடைமுறை தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்கும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேநேரம், சுயதனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் முழுமையாக அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.