இலங்கையில் இன்றைய தினம் மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி,
1. மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு நீரிழிவு நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஆண். 75 வயதுடைய குறித்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொற்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக பதிவாகியது.