கொரொனா சமூக பரிமாற்ற கட்டத்தை அடைந்துள்ளது! பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம் அதிரடி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா சமூக பரிமாற்ற கட்டத்தை அடைந்துள்ளது! பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம் அதிரடி தகவல்!

கொரோனா தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து அளித்து வரும் அறிக்கைகளுக்கு பதிலளித்துள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளனம், நாட்டில் பல பகுதிகள் கிட்டத்தட்ட சமூக பரிமாற்ற கட்டத்தை எட்டியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ள பொது சுகாதார பரிசோதகர் சம்மேளன செயலாளர் எம். பாலசூரிய, கொழும்பின் - மட்டக்குளி, முகத்துவாரம், ப்ளுமெண்டல், கிராண்ட்பாஸ் மற்றும் பொரள்ளை போன்ற பகுதிகளிலிருந்து பல கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

$ads={2}

இந்த தொற்றுக்கள் ஏற்கனவே நாட்டில் ஏற்பட்ட எந்தவொரு கொரோனா கொத்துக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் பதிவாகியுள்ளன.

நடைமுறையில் உள்ள கொரோனா கொத்துக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்படும் போது அங்கே சமூக பரிமாற்றம் நடைபெறுகிறது என்று கூறமுடியும்.

இதுபோன்ற தொற்றுக்கள் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறினாலும் களத்தின் பணியாற்றும் தாங்கள் ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ளதாக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்திலிருந்தும் இதுபோன்ற தொற்றுக்கள் பதிவாகியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

ஏனைய மாவட்டங்களிலிருந்தும் தொற்றுக்கள் பதிவாகியுள்ள சூழ்நிலையில், மக்கள் மற்றும் அதிகாரிகள் இந்த சூழ்நிலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் நியூஸ்

இது தொடர்பாக தாம் தொடர்புடைய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் உள்ள சுகாதார அமைப்பானது நிலைமையை கட்டுப்படுத்த போதுமானது என்றும் அவர் கூறினார். இருப்பினும், இது சரியான கண்காணிப்பு செயல்முறையுடன் செய்யப்பட வேண்டும்.

பயணக் கட்டுப்பாடு முறையாக கவனிக்கப்பட்டு சரிபார்க்கப்படாததால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட புளூமெண்டால் போன்ற பல பகுதிகள் இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.