மாணவர்கள் மத்தியில் இணையக்கல்வி தோல்வியடைந்துள்ளது; இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்கள் மத்தியில் இணையக்கல்வி தோல்வியடைந்துள்ளது; இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!


கொரோனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.


சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஊடகம் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,


பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையங்களுக்கான வசதிகளை கொண்டிருக்கவில்லை. அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ‘மொபைல் சிக்னல்’ என்ற தொலைபேசியின் அலை வீச்சின் செயற்பாட்டு வலிமை மோசமாகவே உள்ளது.


$ads={2}


மேலும் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும்  தரவுகளும் (DATA Packages) மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் போதுமானதாக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்கள், மேற்கு மாகாணத்தில் 50 சதவிகித மக்கள் ஏனைய மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்கள் மாத்திரமே இணைய வசதிகளை கொண்டுள்ளனர்.


எனவே கொரோனா தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வித் தளமாகும் என ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை இணையக் கல்வியானது, மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணணிகள், போன்றவற்றில் அடிமையாகி விட்டனர் என்றும் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.