கொழும்பு நகரில் மிகவும் ஆபத்தான பகுதிகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு நகரில் மிகவும் ஆபத்தான பகுதிகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!


கொழும்பு நகரில் மிகவும் ஆபத்தான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளின் போது 100 பேரில் 30 பேர் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.


வட கொழும்பு மற்றும் பொரளை பகுதிகளே மிகவும் ஆபத்தான பகுதிகளாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் PCR பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் 100இல் 30 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


முகத்துவாரம், வனாத்தவில்லு, ஜிந்துபிட்டி போன்ற மிகவும் ஆபத்தான பகுதிகளிலேயே இந்த நிலைமை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக நாங்கள் PCR சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.