நாட்டில் முடக்கப்பட்டிருந்த மேலும் மூன்று கிராமங்கள் இன்று விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் முடக்கப்பட்டிருந்த மேலும் மூன்று கிராமங்கள் இன்று விடுவிப்பு!

யாழ். மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை இன்று (11) அதிகாலை 5.00 மணி தொடக்கம் நீக்கப்பட்டுள்ளது.

இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குருநகர், திருநகர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் காரணமாக சிலர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

$ads={2}

குறித்த தொற்றாளர்கள் அக்கிராமங்களில் நடமாடி இருந்ததால் அக்கிராமங்களிலிருந்து எவரும் வெளியே செல்லாதவாறும், அக்கிராமங்களுக்குள் புதிதாக எவரும் உள்நுழையாதவாறும் சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்தக் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இன்று காலையிலிருந்து குறித்த மூன்று கிராமங்களும் முடக்க நிலையிலிருந்து நீக்கப்படுகின்றன என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.