முழு நாட்டையும் உடனே முடக்குங்கள்!ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழு நாட்டையும் உடனே முடக்குங்கள்!ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து!

சாக்குப்போக்குக் காரணங்கள் கூறாமல், பொதுமக்களுக்கு முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முழுமையாக முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா வைரஸ் தொற்றின் பேராபத்து மையமாக மேல் மாகாணம் விளங்குகின்றது. இந்நிலையில், இம்மாகாணத்தை 10 நாட்கள் மட்டும் முடக்கியிருந்த அரசு, அதனை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.

$ads={2}

இதனால் கொரோனா தொற்று பரவல் நாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி செயற்பட வேண்டும். சாக்குப்போக்கு காரணங்கள் கூறாமல் முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி வழங்கவேண்டும்.

அந்தக் காலப்பகுதிக்குள் நாடெங்கும் PCR பரிசோதனைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.