BREAKING: IPL தொடர்: வெற்றிவாகை சூடியது மும்பை இந்தியன்ஸ் அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: IPL தொடர்: வெற்றிவாகை சூடியது மும்பை இந்தியன்ஸ் அணி!


IPL தொடரில் 5 தடவைகள் வெற்றிவாகைசூடி மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.


IPL 2020 மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்றிரவு நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின.


முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைக் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 65 ஓட்டங்களைப் பெற்றார்.


பின்னர் 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி  18.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அணித்தலைவர் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்கள் அடங்களாக 51 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார்.


IPL போட்டி தொடரில் ஏற்கனவே 4 தடவைகள் (2013, 2015, 2017, 2019) கிண்ணம் வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி  இம்முறையும் வெற்றிநடைபோட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளராக மஹேல ஜயவர்தன செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.