இம்மாதம் 07க்கு பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு வந்தோருக்கான விசேட வேண்டுகோள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்மாதம் 07க்கு பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு வந்தோருக்கான விசேட வேண்டுகோள்!!

நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், கடந்த 07.11.2020 ஆம் திகதியிலிருந்து ஏனைய மாகாணங்களில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

"இந்தத் திகதியின் பின்னர் வருகை தந்தோரை வீட்டில் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த பிரதேசங்களின் நோய் நிலைமைகளின் அபாய நிலையை பொறுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் தீர்மானிப்பர்.

இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர் அல்லது வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021-2226666 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தர வேண்டும்.

$ads={2}

இதன் மூலம் தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும்.

இந்த நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்." என தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.