இணையம் மூலம் தொலைக்கல்விக்கு பங்கேற்க முடியாதவர்களுக்கு தொலைக்கல்வி மேம்பாட்டு அமைச்சின் நடவடிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இணையம் மூலம் தொலைக்கல்விக்கு பங்கேற்க முடியாதவர்களுக்கு தொலைக்கல்வி மேம்பாட்டு அமைச்சின் நடவடிக்கை!!

தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரொனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகளை தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டு வேலைத்திட்டம தொடர்பாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக இம்மாதம் 15ஆம் திகதி முதல் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தரம் மூன்றில் இருந்து க.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புக்களின் பாடங்களை பூர்த்தி செய்யும் வகையில் பிரபல ஆசிரியர் குழாமின் பங்கேற்புடன் குறிப்பிட்ட பாடங்களைத் தொகுத்து ஒலிப்பதிவு செய்யும் நடவடிக்கை இந்நாட்களில் இடம்பெறுகின்றது.

$ads={2}

இதன் பின்னர், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக வாரத்தில் 7 நாட்களும் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க சந்தர்ப்பம் கிட்டும். தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஒன்லைன் ஊடாகவும் இந்த வசதி கிடைக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவித்தார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.