உலகளாவிய பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையின் சுகாதார அமைச்சு, உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளை குணமானவர்களாக கருதி வெளியேற்றுவதற்கான அளவுகோல்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கொரோனா கண்டறியும் பரிசோதனையிலிருந்து 14 நாட்கள் ஒருவர் கொரோனா அறிகுறியில்லாமல் இருந்தால் அவருக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாமலேயே அவர் குணமானவராக அறிவிக்கப்பட்டு சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
தற்போது கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றுவதற்கு SARS-CoV-2 PCR ± என்டிபொடி சோதனை தேவைப்படுகிறது.
எனினும் 14 நாட்கள் அறிகுறியில்லாத நிலையில் நோயாளிகளை குணமானவர்களாக கருதி வெளியேற்றும் தற்போதைய போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இது நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் பீடத்தின் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே, ஏனைய நாடுகளில், இதுபோன்ற நோயாளிகள் மேலதிக பரிசோதனைகள் இல்லாமல் 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்,
எனினும் இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்குப் பிறகே அறிகுறியில்லாதவர்கள் குணமானவர்களாக கருதி வெளியேற்றப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அதன்படி, கொரோனா கண்டறியும் பரிசோதனையிலிருந்து 14 நாட்கள் ஒருவர் கொரோனா அறிகுறியில்லாமல் இருந்தால் அவருக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாமலேயே அவர் குணமானவராக அறிவிக்கப்பட்டு சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
$ads={2}
தற்போது கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றுவதற்கு SARS-CoV-2 PCR ± என்டிபொடி சோதனை தேவைப்படுகிறது.
எனினும் 14 நாட்கள் அறிகுறியில்லாத நிலையில் நோயாளிகளை குணமானவர்களாக கருதி வெளியேற்றும் தற்போதைய போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இது நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் பீடத்தின் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே, ஏனைய நாடுகளில், இதுபோன்ற நோயாளிகள் மேலதிக பரிசோதனைகள் இல்லாமல் 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்,
எனினும் இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்குப் பிறகே அறிகுறியில்லாதவர்கள் குணமானவர்களாக கருதி வெளியேற்றப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.