அதி ஆபத்தான பிரதேசமாக பொரளை!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதி ஆபத்தான பிரதேசமாக பொரளை!!!

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொரளையில் சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 90 வீதமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.


$ads={2}

சனத்தொகை பரம்பல் அதிகளவில் காணப்படும் இந்தப் பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று உறுதியானவர்கள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நோய்த் தொற்றாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் அதிகளவான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.