கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இலங்கை தயார் இல்லை? சரத் பொன்சேகா கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இலங்கை தயார் இல்லை? சரத் பொன்சேகா கேள்வி!


உலக சுகாதார அமைப்பு விரைவில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த கொரோனாவுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள 2021 வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றைய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இந்த தடுப்பூசிகள் கிடைக்கும் போது அவற்றை பயன்படுத்துவதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்பாடுகளை செய்துள்ளன.


அமெரிக்கா ஒரு இராணுவ ஜெனரல் தலைமையிலான குழுவை நியமித்து தடுப்பூசி விநியோகிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் நிறுவனங்களை கூட அவர்கள் தயார் செய்துள்ளனர். அத்துடன் இந்த செயல்முறைக்கு அமெரிக்கா 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. 


$ads={2}


இந்நிலையில், இந்த செயல்முறைக்கு குறைந்த பட்சம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாவது (ரூ. 180 பில்லியன்) ஒதுக்கப்பட வேண்டும்.


எனினும் வரவுசெலவுத்திட்டத்தில் கொரோனா தொற்றுநோயை எதிர்ப்பதற்காக 16 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.