விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு பொலிஸ் நிலையத்தில் நடந்த அதிரடி நிகழ்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு பொலிஸ் நிலையத்தில் நடந்த அதிரடி நிகழ்வு!

கொழும்பு தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள சொகுசு கார் விற்பனை நிலையம் ஒன்றின் மீது, சொகுசு வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

நுகேகொட பிரிவிற்கு பொறுப்பான எஸ்.எஸ்.பியின் மகள், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தி விபத்திற்குள்ளானது.

இந்த விவகாரம் குறித்து புதிய புதிய தகவல்களை சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.


$ads={2}

அந்த வகையில், விபத்தின் பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட யுவதி அங்கு தாக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தாக்கியது வேறு யாருமல்ல- யுவதியின் தந்தைதான்.

ரோஷனி மலிஷா ரத்நாயக்க என்ற 20 வயதான யுவதியே விபத்தை ஏற்படுத்தினார். அவர் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர்கிறார்.

விபத்து தொடர்பாக குறிப்பிடுகையில், “நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு ஒரு ஒன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள சென்றேன்.

சுமார் அரை மணி நேரம் இடைவெளி விடப்பட்டபோது, நண்பர்களுடன் தேனீருக்காக வெளியே சென்றேன். காபி குடித்துவிட்டு, எனது நண்பரின் ஜீப்பில் வந்தேன். அந்த வாகனத்தைப் பார்த்து நான் சிலிர்ப்படைந்தேன்.

காரை வைத்திருந்த நண்பரான சாம்ராஸை என்னை ஓட்ட அனுமதிக்கச் சொன்னேன். அவர் சாவியைக் கொடுத்தார். உஸ்மான் என்ற மற்றொரு நண்பர் இருந்தார்.

அவன் பின்னால் அமர்ந்தார். சாம்ராஸ் முன் இருக்கையில் இருந்தார். அந்த நேரத்தில் எனது இடது கையில் ஒரு மொபைல் போன் இருந்தது. திடீரென்று ஒரு லொரி என் இடதுபுறத்தில் என்னைக் கடந்தது.

முன்னால் வளைவு இருந்ததால், அது ஒரு பெரிய சுற்று வட்டம். அதனால் நான் தொலைபேசியைக் கைவிட்டு வானத்தை திருப்ப முயன்றேன். ஆனால் ஸ்ரேரிங் பூட்டப்பட்டிருப்பதைப் போல உணர்ந்தேன்.

வாகனம் முன்னால் இருந்த கட்டிடத்தின் மீது மோதியது. என் நண்பர் சிண்டி வேறொரு காரில் இருந்தா். அதே நேரத்தில் அங்கு வந்தார். நான் பயந்திருந்ததால், நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

எனக்கு உரிமம் இல்லை என்று சாம்ராஸுக்குத் தெரியாது. ஆனால் என்னால் நன்றாக ஓட்ட முடியும், ”என்று யுவதி சினமன்கார்டன் பொலிசாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

$ads={2}
இதேவேளை, விபத்து தொடர்பில் யுவதியின் தந்தையான பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்,

“விபத்தில் சிக்கிய ஜீப் மகளின் நண்பருடையது. மகள் கார்களை நேசிக்கிறாள். அதனால்தான் நண்பரிடம் கேட்டு ஓட்டினாள்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நான் காவல்துறைக்குச் சென்று என் மகளை சில முறை அடித்தேன். ஒரு தந்தையாக, என் மகள் செய்ததைக் கண்டு நான் கோபமடைந்தேன்.

2019 ஆம் ஆண்டில் எனது மகனின் கைகளினால் ஒரு விபத்து ஏற்பட்டது. நான் சென்று என் மகனை பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தேன்.

டிரைவர் மது போதையில் இருந்ததால் எனது மகன் வாகனத்தை கொண்டு வந்திருந்தார். அந்த நேரத்தில்தான் பொரளை போலீஸ் டிராஃபிக் ஓ.ஐ.சியின் மோட்டார் சைக்கிளில் மோதியது.

அந்த நேரத்தில் ஆட்சி காரணமாக,மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகன்தான் வாகனத்தை செலுத்தியதாக சாட்சியமளிக்கும்படி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழுத்தம் இருந்தது.

நான் பிள்ளைகளுக்கு பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே மகன் தானாக முன்வந்து உண்மையைச் சொன்னான்.

நான் ஒருபோதும் காவல்துறையில் செல்வாக்கு செலுத்தவில்லை.

விபத்தில் சிக்கிய கார் என்னுடையது என சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது.

அத்தகைய விலையுயர்ந்த வாகனத்தை என்னால் வாங்க முடியாது. வாகனம் என்னுடையது என்ற கூற்று முற்றிலும் தவறான பிரச்சாரம். என் மகள் தவறு செய்தாள். அது இப்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் ஒன்று.

நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு முடிவையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.