சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணம் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணம் பதிவு!

சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணம் பதிவு!

இலங்கையில் இன்றைய தினம் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


அதன்படி,

1. கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண். கொரோனா நோய்த் தொற்று தொடர்பில் வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் குருதியழுத்தம் மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இரத்மலானையை சேர்ந்த 69 வயதான பெண். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. கிருலப்பணை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இந்தப் பெண் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண். அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொரோனா ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக பதிவாகியது.

அதேநேரம் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 401 ஆக பதிவாகியது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.