சூழ்நிலையைப் பயன்படுத்தி பணத்தை சுரண்டும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இஸ்திஹார் இமாதுதீன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சூழ்நிலையைப் பயன்படுத்தி பணத்தை சுரண்டும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இஸ்திஹார் இமாதுதீன்



-ஊடப்பிரிவு

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் கடைகளில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அன்றாடம் தொழில் செய்து வாழ்கை நடத்தி வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.


இந்த சூழ்நிலையில் வியாபாரிகள் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதனால் அன்றாடம் மக்கள் கொள்வனவு செய்ய கூடிய பொருட்கள் (அரிசி,செமன்,கிழங்கு வகைகள்,பருப்பு) கொள்வனவு செய்ய முடியாமல் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் அன்றாடம் தேவையான பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் மற்றும் விலைகளை அதிகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


மேலும் அவர்களின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் நாட்களில் விலை கண்காணிப்பு அதிகாரிகளை இது தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.


பொருட்களின் விலைகள் பற்றி எந்த நேரமும் கவனிக்கப்படும், மேலும் பிடிபடும் வியாபாரிகளுக்கும் எதிராகவும், வியாபார நிலையங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.