தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஓய்வு பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மிகவும் பிரபல்யமான நபர்களில் ஒருவரான மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (02) தனது அலுவலகத்தை காலி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
தேர்தல் திணைக்களம், தேர்தல் ஆணைக்குழு என்பனவற்றில் கடந்த 37 ஆண்டுகளாக மஹிந்த தேசப்பிரிய கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
20ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளரும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே தங்களது அலுவலகங்களை காலி செய்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
20ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஐந்து ஆணையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
$ads={2}
19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக் காலம் நவம்பர் மாதம் பூர்த்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிய ஆணைக்குழுவில் ஓர் ஆணையாளராக பதவி வகிக்குமாறு அதிகாரிகள் கோரியதாகவும், தமக்கு தொடர்ந்தும் பதவி வகிக்க விருப்பமில்லை எனவும், ஓய்வு தேவைப்படுவதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.