தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விடைபெறுகிறார் தேசப்பிரிய!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விடைபெறுகிறார் தேசப்பிரிய!!


தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஓய்வு பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கையில் மிகவும் பிரபல்யமான நபர்களில் ஒருவரான மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (02) தனது அலுவலகத்தை காலி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.


தேர்தல் திணைக்களம், தேர்தல் ஆணைக்குழு என்பனவற்றில் கடந்த 37 ஆண்டுகளாக மஹிந்த தேசப்பிரிய கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


20ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளரும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.


தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே தங்களது அலுவலகங்களை காலி செய்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


20ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஐந்து ஆணையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


$ads={2}


19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக் காலம் நவம்பர் மாதம் பூர்த்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, புதிய ஆணைக்குழுவில் ஓர் ஆணையாளராக பதவி வகிக்குமாறு அதிகாரிகள் கோரியதாகவும், தமக்கு தொடர்ந்தும் பதவி வகிக்க விருப்பமில்லை எனவும், ஓய்வு தேவைப்படுவதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.