அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை (03) நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் என்று புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.சி நியூஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு 52 சதவீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.
$ads={1}
அரிசோனா, புளோரிடா, ஜோர்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர், பென்சில்வேனியா உட்பட்ட 12 ஒருங்கிணைந்த மாநிலங்களில் பைடன் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.
அக்டோபர் 29 முதல் 31 வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத வாக்காளர்கள் டிரம்ப் கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதத்தை தவறு என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.