பொலிஸாரால் அதிரடியாக முடக்கப்பட்ட பஸ்! காரணம் இதுதான்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரால் அதிரடியாக முடக்கப்பட்ட பஸ்! காரணம் இதுதான்

சமூக இடைவெளியை உறுதிப்படுத்த தவறிய குற்றச்சாட்டுக்காக தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ்ஸொன்றை கைப்பற்றிய பொலிஸார், பஸ்ஸின் சாரதியையும், நடத்துனைரையும் கைதுசெய்துள்ளனர்.

பஸ்ஸில் சமூக இடைவெளியை சாரதியும், நடத்துனரும், உறுதி செய்யத் தவறியதாக பயணிகள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளபபட்டுள்ளது.

கொழும்பு - மதுகம வரை இயங்கும் பஸ்ஸொன்றையே பொலிஸார் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.


$ads={2}


பயணிகள் பானதுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததாகவும், பானதுர பொலிஸார் பஸ்ஸை கைப்பற்றியதுடன் சாரதியையும் நடத்துனரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸமா அதிபருமான அஜீத் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை மீறிய சட்டங்ளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை முகமூடி அணியத் தவறியமை மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக 221 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.