சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கடலில் பாயப்போகிறார் என்ற செய்தியை கேட்டு பயந்தே திமிங்கலங்கள் கடலில் இருந்து வந்து கரையொதுங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்தக் கருத்தை இன்று (05) செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக தமது உயிரையும் அர்ப்பணிக்க தயார் என்று பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதனைக்கொண்டே நளின் பண்டார தமது கருத்தை இன்று வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, தம்மை அர்ப்பணிப்பதை காட்டிலும் முதலில் தமது தொழிலை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.
$ads={2}
கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியவில்லை என்றால் கடலில் பாயும் எண்ணம் பவித்ராவுக்கு இருக்கக்கூடும்.
பவித்ரா கடலில் பாயப்போவதாக தெரிவித்த செய்தியை கேட்டே பாணந்துறை கடலில் அண்மையில் பல திமிங்கலங்கள கரையொதுங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.