மூச்சு விடுவதில் சிரமம்; 18 வயது மாணவி தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூச்சு விடுவதில் சிரமம்; 18 வயது மாணவி தற்கொலை!


யாழில் 18 வயது மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


இவர் தொடர்ச்சியாக மூச்சுவிடுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ள நிலையில் தாயாரிடமும் கூறியுள்ளார்.


தாயார் வைத்தியசாலை செல்வோம் எனக் கூறியிருந்த போதும் அந்த மாணவி மூச்சடைப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயார் இல்லாத நேரம் பார்த்து தவறான முடிவினை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்ததுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.