எதிர்வரும் காலங்களில் நாட்டுக்குள் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பயணிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான டிக்கெட் கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பணவை கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ உரிய அங்கீகாரத்தினை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தவிர எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கம் அளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு இதன்மூலம் அறிவிக்கின்றது.
$ads={2}
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீளழைத்து வருவதற்கான செயன்முறையானது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கப்படும்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேலதிக மற்றும் உத்தியோகபூர்வ தகவல்களுக்காக அருகிலுள்ள இலங்கை தூதரகம் அல்லது இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் புகார்களை இலங்கை உத்தியோகபூர்வ வலைத்தளமான https://www.contactsrilanka.mfa.gov.lk/ எனும் முகவரியில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.