இலங்கை பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!


எதிர்வரும் காலங்களில் நாட்டுக்குள் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பயணிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான டிக்கெட் கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பணவை கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ உரிய அங்கீகாரத்தினை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தவிர எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கம் அளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு இதன்மூலம் அறிவிக்கின்றது.

$ads={2}

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீளழைத்து வருவதற்கான செயன்முறையானது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கப்படும்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேலதிக மற்றும் உத்தியோகபூர்வ தகவல்களுக்காக அருகிலுள்ள இலங்கை தூதரகம் அல்லது இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் புகார்களை இலங்கை உத்தியோகபூர்வ வலைத்தளமான https://www.contactsrilanka.mfa.gov.lk/ எனும் முகவரியில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.