கொழும்பு நோக்கி வருவோருக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு நோக்கி வருவோருக்கான விசேட அறிவித்தல்!

கொழும்பு நகரத்திற்கு குறைந்த அளவிலானோரே வருகைத்தர முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு விடயங்களுக்காக கொழும்பு நகரத்திற்கு வருவதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

மேல் மாகணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்றைய தினம் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா நோயாளியாகுவதனை தவிர்க்க முடியாத விடயமாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் ஆபத்தான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பகுதிகளில் கொரோனா நோயாளிகள் இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பது கடினம். இதனால் கொழும்பு வருவதனை தவிர்க்கவும். இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.