ரூ. 5000 பெற்றுக்கொள்ள வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூ. 5000 பெற்றுக்கொள்ள வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் மரணம்!

கொரோனா நிவாரண கொடுப்பனவாக வழங்கப்படும் 5000 ரூபாவினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் கீழே விழுந்து மரணித்துள்ளார்.

நீர்கொழும்பு கட்டான கதிரான கிராம சேவகர் காரியாலயத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


$ads={2}

வடக்கு கதிரான பகுதியைச் சேர்ந்த உடுகம கோரலாகே சோமாவதி என்ற 60 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பீதி காரணமாக, கீழே விழுந்த பெண்ணுக்கு எவரும் உதவ முன்வரவில்லை எனவும் பின்னர் அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.