வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படும் என்று சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வேலைகளை மாற்றுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒப்பந்த கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா தளர்த்தும் என நாட்டின் மனிதவள துணை அமைச்சர் நேற்று (04) தெரிவித்தார்.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைக்கு வரும் இந்த திட்டங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் முதலாளிகளின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறும் உரிமை அடங்கும் என மனிதவள துணை அமைச்சர் அப்துல்லாஹ் பின் நாசர் அபுத்தைன் கூறினார்.
சவூதி தொழிலாளர் சந்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.
சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளில் செயல்படுவதாகவும், திட்டங்கள் தயாரானவுடன் அறிவிக்கப்படும் என கடந்த வாரம் சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.