சவூதியில் பணி புரிபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ள அரசு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதியில் பணி புரிபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ள அரசு!!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படும் என்று சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வேலைகளை மாற்றுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒப்பந்த கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா தளர்த்தும் என நாட்டின் மனிதவள துணை அமைச்சர் நேற்று (04) தெரிவித்தார்.

$ads={2}

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைக்கு வரும் இந்த திட்டங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் முதலாளிகளின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறும் உரிமை அடங்கும் என மனிதவள துணை அமைச்சர் அப்துல்லாஹ் பின் நாசர் அபுத்தைன் கூறினார்.

சவூதி தொழிலாளர் சந்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளில் செயல்படுவதாகவும், திட்டங்கள் தயாரானவுடன் அறிவிக்கப்படும் என கடந்த வாரம் சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.