கண்டி - கெலிஓயாவில் மகாவலி ஆற்றில் மூழ்கி 23 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - கெலிஓயாவில் மகாவலி ஆற்றில் மூழ்கி 23 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

கண்டி - பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓயா, கல்கமுவ பகுதியில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மொகமட் சுஹைல் (Mohamed Suhail) என்ற 23 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேற்றைய முன்தினம் (03) மாலை 4.00 மணியளவில் கல்கமுவ பகுதியை ஊடறுத்துச்செல்லும் மகாவலி கங்கையில் நீராட சென்றுள்ளார். இதன்போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

$ads={2}

இதனையடுத்து பொலிஸாரும், சுழியோடிகளும், பிரதேச வாசிகளும் இணைந்து தேடுதல் நடத்தினர். நேற்று (04) இரண்டாவது நாளாகவும் தேடுதல் தொடர்ந்தது. எனினும் இதுவரை சடலம் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.