சுகாதார அமைச்சின் தொழிநுட்பக் குழு எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி கூடவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அன்றைய தினத்தில் (12) நள்ளிரவே வர்த்தமானியை வெளியிடலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
திருத்தப்பட்ட வர்த்தமானியை வெளியிட நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை பச்சைக்கொடி காட்டிய நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனாவால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்யலாமென்ற வர்த்தமானியை வெளியிடுவாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.